முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா : 150 ஆடுகள், 300 கோழிகள் கொண்டு பிரம்மாண்ட பிரியாணி விருந்து

Jan 25 2020 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழாவில், ஆயிரக்‍கணக்‍கானோர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராம முனியாண்டி சுவாமி கோயிலின், 85-வது ஆண்டு திருவிழா, வெள்ளி கிழமையன்று தொடங்கியது. காப்புகட்டி விரதம் இருந்த பக்‍தர்கள், பால்குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வழிபாடு நடத்தினர். வீடுகளில் இருந்து தேங்காய், பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து, நிலைமாலையை கோயிலில் வைத்து, தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவாக, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய, 150 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் கொண்டு, பிரியாணி விருந்து தயார் செய்யப்பட்டது. இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, கேரளா வெளிமாநிலங்களில் இருந்து, முனியாண்டி விலாஸ் உணவகம் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளூவாசிகள் உள்ளிட்ட ஆயிரக்‍கணக்‍கானோர் இதில் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00