திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Feb 12 2020 7:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில், மூலவர் பிரதிஷ்டை தினம் வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி விஸ்வரூப தரிசனமும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர்
தங்க கொடிமரம் முன்பாக கும்பங்கள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், மேளதாளங்கள் முழங்க, மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் பெருமாள் விமான கலசங்களுக்கு, சிவாச்சாரியர்கள் புனித நீரால் அபிஷேகம் செய்தனர்.