ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக விநாயகர் கோயில் இடிப்பு : பக்தர்கள் கடும் கண்டனம்
Feb 13 2020 9:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே இருந்த விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நெல்லை சந்திப்பில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தை 78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டுவதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணி துவங்கியது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பேருந்து நிலையம் அருகே 70 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவந்த விநாயகர் கோயில் இடிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு மேலாக இருந்துவந்த மரத்தையும் ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பக்தர்கள் எச்சரித்துள்ளனர்.