பழனியில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தீவிரம் : பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு
Feb 14 2020 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனிக்கு பாதயாத்திரையாக வரும் காவடி குழுவுக்காக, மலைக் கோயிலில் சுமார் 15 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பழனியில் தைப்பூசத் திருவிழா நிறைபெற்ற நிலையில் ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் காவடி குழுவுக்காக, மலைக் கோயிலில் சுமார் 15 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 8 டன் மலைவாழை, இரண்டாயிரம் கிலோ பேரீட்சை, 500 கிலோ கற்கண்டு, கரும்பு சர்க்கரை 1 புள்ளி 5 டன், 100 கிலோ தேன், 100 கிலோ நெய் மற்றும் 10 கிலோ ஏலக்காய் கொண்டு வரப்பட்டுள்ளன.