மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி : வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்த நடனங்கள்
Feb 21 2020 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹா சிவராத்திரி விழாயொட்டி சிதம்பரத்தில், நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பரத கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய ஆராதனை செய்தனர்.
நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 39-ம் ஆண்டு சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவின் இரண்டாம் நாளான நேற்று, உள்ளூர் மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பரதம், ஒடிசி போன்ற நாட்டிய நடன நிகழ்ச்சிகளை அறங்கேற்றினர்.
நடனக் கலைஞர்களுக்கு சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பங்கேற்று நாட்டியாஞ்சலி விழாவை கண்டு ரசித்தனர்.