திருச்சி அரியமங்கலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரம் அகோரிகள் சிறப்பு பூஜை
Feb 22 2020 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி அரியமங்கலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நள்ளிரவில் அகோரிகள் சிறப்பு பூஜைகள் நடத்தி, சிவபெருமானை வழிபட்டனர்.
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரம், சிவராத்திரியையொட்டி அகோரிகள் சிறப்பு யாகம் நடைபெற்றது. உடல் முழுவதும் திருநீரு பூசிக்கொண்டு, மந்திரங்கள் ஓத, சிறப்பு யாகம் நடைபெற்றது. அப்போது மேளங்கள் முழங்க, சங்கு நாதம் எழுப்பியவாறு, ஹர ஹர மகாதேவ் என கோஷமிட்டனர். இதற்கு முன்னதாக அங்கு பிரதிஷ்டை செய்யபட்டுள்ள, அகோர காளி, பைரவருக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன.
கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் சிவராத்தியை முன்னிட்டு நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்வில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பூசாரி கையில் அரிவாள், சூலாயுதம் ஏந்தி, மாசாணியம்மனின் உருவத்தை சுற்றி ஆக்ரோசமாக நடனமாடினார்.