சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி : பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்த கலைஞர்கள்
Feb 25 2020 9:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் 4வது நாளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் முன்னணி நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். இதனை இசை ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.
உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று சென்னையை சேர்ந்த G.S. ஸ்டடி சென்டர் ஜீவிதா நாட்டியாலய குழுவினர் மற்றும் தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி அசத்தினர்.