திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற வைபவம் - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
Feb 25 2020 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற, கொடியேற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் வரும் 6-ம் தேதியும், 9-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 10-ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.