தியாகராஜ சுவாமி ஆலய பங்குனி உத்திர கொடியேற்றம் : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Mar 11 2020 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. விநாயகர், சுப்ரமணியர், சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்து பின், 54 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தீர்த்தவாரி ஏப்ரல் 6-ம் தேதியும், 7-ம் தேதி ஸ்ரீதியாகராஜ சுவாமியின் பங்குனி உத்திர பாத தரிசனமும் நடைபெறும். ஆழித்தேரோட்ட விழா மே 4-ம் தேதி நடைபெறுகிறது.