சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்கு வரவேண்டாம் - கோயில் நிர்வாகம் அறிவிப்பு
Mar 13 2020 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் வருவதை தவிர்க்க வேண்டுமென கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காய்ச்சல், தொடர் இருமல் இருப்பவர்கள், மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் கை கழுவும் இடங்களில் வைரஸ் தடுப்பு கிருமி நாசினிகள் வைக்கப்பட உள்ளதாகவும், அதனை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.