திருப்பதி கோயிலுக்கு காய்ச்சலுடன் வருபவர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு - தேவஸ்தானம் அறிவிப்பு
Mar 13 2020 6:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காய்ச்சலுடன் வரும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாள்தோறும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்பதை பரிசோதிக்க சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பதி மலையில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடி மற்றும் மலைப்பாதை ஆகியவற்றில் காய்ச்சலுடன் வரும் பக்தர்களுக்கு சிகிச்சை அளித்து, கொரோனா அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்ய பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். 100 டிகிரி செல்சியஸ்க்கும் அதிக உடல் வெப்பத்துடன் மலையடிவாரத்திற்கு வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.