கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - சிங்கப்பூர் முருகன் கோவிலில் நடைபெற இருந்த பங்குனி தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Mar 16 2020 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, சிங்கப்பூர் முருகன் கோவிலில் நடைபெற இருந்த பங்குனி தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற சிங்கப்பூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழாவில், வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, அடுத்த மாதம் 6-ந்தேதி பங்குனி உத்திர விழா நடைபெற உள்ளது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தேரோட்ட விழாவில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டும், கூட்டம் திரள்வதை தடுக்கும் வகையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாகவும் தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.