திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் 31-ம் தேதிவரை பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
Mar 19 2020 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், வரும் 31-ம் தேதிவரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நவகிரகங்களில் சனி பகவானுக்கு உரிய ஆலயமாக இது கருதப்படுகிறது. இந்தநிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறப்பு தரிசனங்கள் மற்றும் அபிஷேகங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், தினசரி பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும், கூறப்பட்டுள்ளது.