குருத்தோலை ஞாயிறன்று வெறிச்சோடிய தேவாலயங்கள் : கொரோனா விழிப்புணர்வாக வீடுகளிலேயே கிறிஸ்தவர்கள் வழிபாடு
Apr 5 2020 2:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு மற்றும் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிறிஸ்தவ தேவாலயங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கிறிஸ்தவர்களின் பண்டிகையான குருத்தோலை ஞாயிறு இன்று அனுசரிக்கப்படுகிறது. ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தக் நிக்ழ்வில், குருத்தோலை பிடித்தபடி கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடிக்கொண்டு ஜெபித்தவாறே சாலைகளில் ஊர்வலமாக செல்வார்கள். பின்னர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தற்போது, ஊரடங்கு அமலில் இருப்பதால் அரசின் வேண்டுகோளை ஏற்று ஏப்ரல் 14ம் தேதி வரை தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நடைபெற இருந்த குருத்தோலை ஊர்வலகங்கள் மற்றும் பொது வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக தேவாலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.