திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா - முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு 9 கால பூஜைகள் மட்டுமே நடந்தேறின
Apr 6 2020 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தர் முருகன் கோயிலில் பக்தர்கள் இல்லாத நிலையில் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டு, பூஜைகள் மட்டுமே நடைபெற்றன.
புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் உத்திர திருவிழா சிறப்புமிக்கதாகும். ஏற்கெனவே அறிவித்தபடி இவ்விழா இன்று தொடங்குவதாக இருந்தது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுவதால், பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, 9 கால பூஜைகள் மட்டுமே நடைபெற்றன. பக்தர்கள் இல்லாத நிலையில் அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்று இந்த பூஜைகளை செய்தனர்.
இதேபோல், புகழ்பெற்ற திருத்தணி முருகன் கோயிலிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறாத நிலையில், பூஜைகள் மட்டுமே செய்யப்பட்டன. பக்தர்களின் பங்கேற்பு இல்லாமல், இதில் அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்று பூஜைகள் செய்தனர்.