கோவில்கள் அடைக்கப்பட்டதால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு
May 14 2020 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் ஊரடங்கினால் ஆலயங்கள் மூடி இருப்பதால் கோவிலை நம்பி டெண்டர் எடுத்த சிறு நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி சன்னதி தெருவில் கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பி சுமார் 50-க்கும் மேற்பட்ட நடைபாதை பூக்கடைகள் மற்றும் பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. மூன்று லட்சம் வரை பணம் கட்டி ஏலம் எடுத்தும், ஊரடங்கால் ஆலயங்கள் மூடி கிடப்பதால் எந்தவித வருவாயும் இன்றி தவித்து வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.