ஊரடங்கு தடை உத்தரவால், தஞ்சை பெரிய கோவில் பிரதோஷ நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது
May 21 2020 3:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊரடங்கு தடை உத்தரவால், தஞ்சை பெரிய கோவில் பிரதோஷ நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவிலில், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பிரதோஷத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், பக்தர்கள் இல்லாமல் மகாம் நந்தியம்பெருமானுக்கு பிரதோஷம் நடைபெற்றது. நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், வெண்ணை உள்ளிட்டவைகளால் அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் சிவாச்சாரியார்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.