கொரோனா ஊரடங்கால் மதுரை மாவட்டத்தில் கோவில்கள் மூடல் : பூ, பழக்கடை வியாபாரிகள் வருமானமின்றித் தவிப்பு
May 22 2020 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கால், மதுரை மாவட்டத்தில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால், அவற்றை சார்ந்துள்ள பூக்கடை மற்றும் பழக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் கோவில் நகரம் என்றழைக்கப்படும் மதுரையில், புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், அழகர் கோவில் போன்ற 100-க்கும் மேற்பட்ட தொன்மையான கோவில்கள் உள்ளன. தற்போது, கொரோனா அச்சத்தால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் கோவில்களுக்கு வராததால், இவற்றை சார்ந்துள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு வியாபாரிகள் மற்றும் தேங்காய், பழம், பூக்கடை வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருவதாக வேதனைத் தெரிவித்தனர்.