புதுச்சேரியில் கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் போராட்டம்
May 26 2020 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் இந்து கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர், 108 கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாநில தலைவர் திரு. சனில் குமார் தலைமையில் 10 பேர் கோயில் முன்பு வணங்கி தோப்புக்கரணம் போட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் உடனடியாக இந்து கோயில்களைத் திறந்து வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.