மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் வசந்த உற்சவத் திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள்
May 28 2020 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் வசந்த உற்சவ திருவிழாதொடங்கியது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் இந்த விழா, ஊரடங்கு காரணமாக பக்தர்களின்றி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி, கோயில் உள் பிரகாரத்தில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பட்டு, பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் முன்பு வந்தபோது, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், வசந்த மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில் பணியாளர்கள் மற்றும் பட்டர்கள் முகக்கவசம் அணிந்தபடி கலந்து கொண்டனர்.