கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா : மஞ்சள் நீராட்டு பூஜையில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் பங்கேற்பு
Jun 3 2020 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழாவில் மஞ்சள் நீராட்டு பூஜை இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி, கோவில் உள் பிரகாரத்தில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பட்டு, பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பாக பல்லக்கு வந்தடைந்தது. வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கள்ளழகர் மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி ஸ்ரீதேவி, பூதேவி சமதே தெற்குப் பிரகாரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு வசந்த உற்சவ மண்டபத்திற்கு வந்தடைந்தனர். அங்கு சூர்ணோற்சவம் என அழைக்கப்படும் மஞ்சள் நீராட்டு பூஜை நடைபெற்றது.