திருப்பதியில் வரும் 8 மற்றும் 9ம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு அனுமதி - 10 மற்றும் 11ம் தேதிகளில் உள்ளூர் பக்தர்கள் தரிசிக்கலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு
Jun 5 2020 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, வரும் 11-ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மூடப்பட்ட வழிபாட்டு தலங்களை, வரும் 8-ம் தேதி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கலாம் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி சில நிபந்தனைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலை திறக்க, திருமலை தேவஸ்தானத்திற்கு ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், வரும் 8 மற்றும் 9-ம் தேதிகளில் தேவஸ்தான ஊழியர்களும், 10-ம் தேதி உள்ளூர் பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வரும் 11ம் தேதி முதல் வெளியூர் பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, சுமார் இரண்டரை மாத கால நீண்ட இடைவெளிக்கு பின்னர் திருப்பதி ஏழுமலையானை வரும் 11ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் தரிக்க உள்ளனர்.