திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று - அடுத்த 2 நாட்களுக்கு கோவில் நடை மூடப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு
Jun 13 2020 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயிலில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருப்பதியில் கோவிந்தராஜசாமி கோயில் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் தேவஸ்தான் ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் கோயில் நடை அடைக்கப்பட்டது. கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை நடை திறக்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.