திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது
Jun 14 2020 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் முடப்படுவதற்கு முன்பு 22 நாட்கள் வசூலான உண்டியல் பணம் எண்ணப்பட்டது. கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 26-ம் தேதி முதல் மார்ச் 19-ம் தேதி வரை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தயதில் ஒரு பகுதி வசூல் எண்ணப்பட்டது. இதில் திருக்கோயில் நிரந்தர உண்டியல்கள் மூலம் 60 லட்சத்து 95 ஆயிரத்து 614 ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் 119 அயல்நாட்டு ரூபாய் நோட்டுக்களும், 546 கிராம் தங்கம் மற்றும் 6 ஆயிரத்து 570 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளன.