சூரிய கிரகண நாளான இன்று திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நடை திறந்திருக்கும்
Jun 21 2020 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சூரிய கிரகண நாளான இன்று, திருநள்ளாறில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரன் சன்னதி கொண்ட கோவில், வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் இன்று காலை பத்து 22 மணி முதல் பிற்பகல் ஒன்று 32 மணி வரை நிகழ உள்ளது. இதையொட்டி, பல்வேறு கோவில்களில் நடை மூடப்படுவது வழக்கம். ஆனால், உலகப் புகழ்பெற்ற திருநள்ளாற்றில், சனீஸ்வரர் சன்னதி கொண்டுள்ள தர்பாரண்யேசுவரர் கோவிலில், எந்தவொரு கிரகண நாளிலும் நடை மூடப்படுவதில்லை. இக்கோவிலின் மூலவரான தர்பாரண்யேசுவரர் கிரகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதால், நடை மூடப்படுவதில்லை என்று கோவில் தலைமை அர்ச்சகர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். கிரகணம் முடிந்தவுடன், சனீஸ்வரருக்கு கிரகண புண்ணிய பூஜையும், அதைத்தொடர்ந்து உச்சிகால பூஜை உள்ளிட்டவை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.