திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு - நாளை முதல், மேலும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
Jun 26 2020 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாளை முதல் நாளொன்றுக்கு மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை கடந்த ஜூன் 11-ம் தேதி திறக்கப்பட்டது. இதனையடுத்து முன்பதிவு மூலம் குறைந்த அளவிலான பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நாளை முதல் இம்மாதம் 30-ம் தேதி வரை 300 ரூபாய் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை மேலும் 3 ஆயிரம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏழுமலையான் கோயிலில் நாளொன்றுக்கு 12 ஆயிரத்து 750 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.