வழிபாட்டு தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் : தமிழக அரசு
Jul 1 2020 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள், கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு கீழ் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை, வரும் 6ம் தேதி முதல் திறக்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், வழிபாட்டு தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனுமதிக்கப்பட்ட சிறிய வழிபாட்டு தலங்களின் நுழைவாயிலில், கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் - வழிபாட்டு தலங்களுக்கு வருவோர் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் - முகக் கவசம் அணிந்திருந்தால் மட்டுமே வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்களுக்கு வருபவர் 6 அடி தள்ளி நின்று சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்- எந்தவித அறிகுறியும் இல்லாதவர்களை மட்டுமே வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் - பஜனை உள்ளிட்ட இறைபாடல்கள் பாட அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்னதானக் கூடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் - பிரசாதம், தீர்த்தம் வழங்க அனுமதி இல்லை - தேங்காய், பூ, பழங்கள் போன்றவற்றை வழங்க கூடாது - வழிபாட்டு தலங்களில் உள்ள கடைகளில் பிரசாதம் வாங்கினாலும் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை - சிலைகள், புனித நூல்களை தொட்டு வணங்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.