சென்னை தண்டையார்பேட்டையில் நாகாத்தம்மன் கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை
Jul 9 2020 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தண்டையார்பேட்டையில் நாகாத்தம்மன் கோயிலில் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தையும், அம்மன் கழுத்தில் இருந்த நகை மற்றும் கொலுசுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இளைய முதலி தெருவில் உள்ள பழமை வாய்ந்த நாகாத்தம்மன் கோவிலில் பூஜை செய்ய சென்ற போது அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை தெரியவந்தது. இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.