திருநள்ளாறு சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
Aug 2 2020 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு ஸ்ரீசனிஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு, ஸ்ரீநந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீநந்தி பெருமான் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல், மயிலாடுதுறை காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள நந்தி சன்னதியில், ஆடி மாத சனிப்பிரதோஷசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால், படகில் பூஜை பொருட்களை எடுத்துச் சென்று நந்தியம் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.