சங்கரநாராயணசுவாமி கோவிலில் கலையிழந்த ஆடித்தபசு திருவிழா
Aug 2 2020 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஆகமவிதிப்படி தொன்று தொட்டு நடந்து வரும் சங்கரநாராயணசுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா இந்த வருடம் முறைப்படி நடக்காததால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். இந்த வருடம் நோய்த்தொற்று காரணமாக ஆடித்தபசு திருவிழாவை ரத்து செய்வதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும் வழக்கம்போல கோவிலுக்குள் பூஜை நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் உள்பிரகாரத்தில் சப்பரங்கள் இன்றி சுவாமி, அம்பாளை எதிரெதிரே அமரவைத்து பூஜை செய்து தீபாராதனை காட்டி தபசு காட்சி நடைபெற்றது.