ஆடிப்பெருக்கையொட்டி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காவிரித்தாய்க்கு ஆடிச் சீர் வழங்கும் வைபவம் - கொரோனா சமூக விலகலை மறந்து பங்கேற்ற பக்தர்கள்
Aug 2 2020 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காவிரித் தாய்க்கு ஆடிச் சீர் வழங்கும் வைபவம் எளிமையாக நடைபெற்றது.
ஆடிப் பெருக்கன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள், தனது தங்கையான காவிரித் தாய்க்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த நிகழ்ச்சி வழக்கமான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.
அதேவேளையில், மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பாடாகி, ரெங்கவிலாஸ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, பூஜைகள் நடைபெற்ற பின், காவிரி தாய்க்கு, பட்டு வஸ்திரம், மஞ்சள், மாங்கல்யம், பூ உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய ஆடிச்சீர் அளிக்கும் வைபவம் நடைபெற்றது. மங்கலப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மா மண்டபத்தில் காவிரித் தாய்க்கு சீராக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நின்றிருந்தபடி வழிபாடு செய்தனர்.