சபரிமலையில் இன்றுகாலை நிறைபுத்தரி வழிபாடு : கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
Aug 9 2020 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரி பூஜை இன்று காலை நடைபெற்றது.
ஆடி மாதத்தில் நடைபெறும் நிறை புத்தரி வழிபாட்டில் தேவசம்போர்டுக்கு சொந்தமான வயல்களில் விளையும் பயிர்கள், நெற்கதிர்களை கொண்டும் தமிழக பக்தர்களின் காணிக்கையை கொண்டும் ஐயப்பனுக்கு வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு நிறைபுத்தரி வழிபாட்டிற்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நிறைபுத்தரி வழிபாட்டுக்காக கேரளா மற்றும் தமிழக பக்தர்கள் நெற்கதிர்கள் கொண்டு வர வேண்டாம் எனவும் தேவசம் போர்டு கேட்டுக்கொண்டது. இந்தசூழலில் இன்று அதிகாலை பக்தர்கள் இன்றி நிறைபுத்தரி பூஜை நடைபெற்றது.