கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நிமிஷாம்பாள் திருக்கோயிலை வெள்ளநீர் சூழ்ந்தது
Aug 9 2020 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள நிமிஷாம்பாள் திருக்கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில், அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால், ஸ்ரீரங்கப்பட்டினத்தில், காவிரிக் கரையோரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற நிமிஷாம்பாள் திருக்கோயிலை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமலும், அங்குள்ளவர்கள் வெளியேற முடியாமலும் தவித்தனர்.