ஆடி மாத தேய்பிறை அஷ்டமியில் கும்பகோணம் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
Aug 12 2020 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கும்பகோணம் அருகே ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருநாகேஸ்வரத்தை அடுத்துள்ள செம்பியவரம்பல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோயிலில், ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மிளகு, முந்திரி, திராட்சை, சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், பழங்கள் மற்றும் 96 வகை ஹோம திரவியங்களை கொண்டு பைரவருக்கு மகா யாகம் நடைபெற்றது. தனி சன்னதியில் ஸ்ரீ பைரவியுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கும், உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.