ஆண்டு வருமான அடிப்படையில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுவது சரியல்ல : தமிழக அரசுக்கு மத குருமார்கள் கடும் கண்டனம்
Aug 12 2020 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆண்டு வருமான அடிப்படையில் மத வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுவது சரியல்ல என தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் திரு. கலிபா சாஹிப், ஒரு வழிபாட்டு தலத்தில் வருடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வருமானமுள்ள சிறிய ஆலயங்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள் திறக்கலாம் என்ற அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது என்றும், ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளதால் கிறிஸ்தவ தேவாலயங்கள் வழிபாடு நடத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். டாஸ்மாக்குக்கு கொடுக்கும் முக்கியதுவத்தைவிட மத வழிபாட்டு தலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமானால் தமிழ்நாடு செழுமை அடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.