திருத்தணி முருகன் கோயில் தெப்பத்திருவிழா ரத்து : பக்தர்கள் வருவதை தடுக்க மலைக்கோயிலில் போலீஸ் பாதுகாப்பு
Aug 12 2020 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் வருவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழாவை ரத்து செய்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், சுவாமிக்கு அனைத்து சிறப்பு அபிஷேக தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும் என்றும், உற்சவர் உலா நிகழ்ச்சியை, திருக்கோயில் இணையதள தொலைக்காட்சி மூலம் நேரலையில் காணலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.