பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள் - கோயிலில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம்
Sep 15 2020 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு, இன்று முதல் 4 நாட்கள் கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசிக்க, கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். கொரோனா அச்சமின்றி, சமூக இடைவெளியை பின்பற்றாமல் கோயிலுக்குள் பக்தர்கள் திரண்டதால், நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.