புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு - ஆன்லைன் மூலம் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி
Sep 16 2020 10:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களும் நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, 21-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு பெறுகிறது. ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கான தடை நீடிக்கிறது.