திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு ரத்து - கோயில் நிர்வாகம் அறிவிப்பு
Sep 16 2020 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முடி காணிக்கை மற்றும் தரிசனத்திற்கு, காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று, அறிவுறுத்தப்பட்டுள்ளது.