மஹாளய அமாவாசையையொட்டி சென்னையில் ஆலயங்களில் மக்கள் வழிபாடு - நீர்நிலைகளில் தர்ப்பணம்
Sep 17 2020 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
சென்னையில் மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி. நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
கொரோனா கட்டுப்பாட்டையும் மீறி சில இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சைதாப்பேட்டை கார்ணீஸ்வரர் கோயில் குளம் அருகே தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் எந்தவிதமான சமூக இடைவெளியும் இன்றி ஒரு சிலர் முகக் கவசம் அணியாமல் தர்ப்பணம் கொடுத்தனர்.
கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு, முக்கிய நிகழ்வான மஹாளய அமாவாசை வழிபாட்டிற்கு முன்னேற்பாடுகள் செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.