திருப்பூரில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படாததால் பக்தர்கள் அதிர்ச்சி
Sep 19 2020 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில், புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படாததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயில், உடுமலை அருகே ஏழுமலையான் கோவில், அவிநாசி அருகில் உள்ள கருவலூர் கருணாகர வெங்கட்ரமண சுவாமி கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. எனினும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுவதாக, இந்து சமய அறநிலையத் துறையினரின் தெரிவித்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பக்தர்கள் இல்லாததால் கோயில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.