அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்த பக்தர்கள் அனுமதி மறுப்பு
Sep 19 2020 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு வழிபாடு நடத்த பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. புரட்டாசி முழுவதும் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கால்நடைகள் மற்றும் தானியங்களை காணிக்கையாக எடுத்து வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனினும், கோதண்டராமசுவாமி கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.