நாகை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் அமைந்துள்ள துர்கா மஹாலட்சுமி ஆலயத்தில் சதசண்டி யாகம்
Oct 22 2020 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் அமைந்துள்ள துர்கா மஹாலட்சுமி ஆலயத்தில் நவராத்திரியையொட்டி சதசண்டி யாகத்தின் 5 நாள் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆலயத்தில் 18 கைகளுடன் உள்ள மஹாலட்சுமியை போற்றி வழிபடும் சதசண்டி யாகம், கடந்த 17ம் தேதி தொடங்கியது. 5ம் நாளான நேற்று அம்பாளுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தருமபுரம் மடாதிபதி மாசிலமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர்.