நவராத்திரி திருவிழாவின் 6ம் நாளையொட்டி ஆலயங்களில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன் - வீடுகளில் கொழு வைத்து வழிபாடு
Oct 23 2020 10:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி திருவிழாவின் 6ம் நாளையொட்டி ஆலயங்கள், வீடுகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 17ம் தேதி தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவராத்திரியின் ஆறாம் நாளான நேற்று நவராத்திரி கொலு மண்டபத்தில், அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு, சுவாமியும், அம்மனும் வேல் வழங்கும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில், நவராத்திரி 6ம் நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆண்டாள் கோலத்தில் அம்மன் காட்சியளித்தார்.
நவராத்திரி விழாவின் ஆறாவது நாளான நேற்று, கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் பல்வேறு வீடுகளில் கொலு பூஜை நடைபெற்றது. கொரானா, நோய் நாட்டை விட்டு போக வேண்டும் -விவசாயம் செழிக்கவும், தொழில் பெருகவும், மழை வேண்டியும், சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கைவினை பொருட்களால் ஆன பொம்மைகள், களிமண்ணால் உருவான பொம்மைகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மைகளால் கொலு படிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.