நவராத்திரியை முன்னிட்டு அஷ்டதசபுஜ மகாலெட்சுமி துர்கா ஆலயத்தில் நவசண்டி யாகம்
Oct 24 2020 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரியை முன்னிட்டு, மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் மகாலெட்சுமி துர்கா ஆலயத்தில், நவசண்டி யாகம், ஒன்பது வகை மரங்களுக்கான விருட்ச பூஜை நடைபெற்றது. அரசம், ஆலம், மா, வாழை உள்ளிட்ட ஒன்பது வகையான மரங்கள் வைக்கப்பட்டு, அவற்றுக்கு மஹாதீபாரானை செய்யப்பட்டது. தொடர்ந்து தேவி மகாத்மியம் வாசிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தருமபுரம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.