குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா - காளியாட்டம் ஆடி காணிக்கை திரட்டும் பக்தர்கள்
Oct 24 2020 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவையொட்டி, பல்வேறு வேடங்களை அணிந்து, காளியாட்டம் ஆடி பக்தர்கள் காணிக்கை திரட்டி வருகின்றனர். இந்திய அளவில் மைசூருக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா, இம்மாதம் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக காளி, அம்மன், சிங்கம், குரங்கு உள்ளிட்ட வேடங்களை அணிந்து பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள், காளியாட்டம் ஆடி, காணிக்கை திரட்டி வருகின்றனர். திரட்டப்படும் காணிக்கையை வரும் 26-ம் தேதி நடைபெறும் மஹிசாசூர சம்ஹார நிகழ்ச்சியின்போது, பக்தர்கள் உண்டியலில் செலுத்துவர்.