குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் : வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது
Oct 27 2020 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மைசூருக்கு அடுத்ததாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தான், தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இத்திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் கலந்து கொள்ளாமல் கோவில் உட் பிரகார மண்டபத்தில் வைத்து மிக எளிமையாக நடைபெற்றது.