நவராத்திரி திருவிழாவின் நிறைவாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது
Oct 27 2020 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி திருவிழாவின் நிறைவாக, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில்
பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தடை உத்தரவு
காரணமாக, யானைகள் அணிவகுப்புடன் பிரம்மாண்டமாக நடைபெறும் ஊர்வலங்கள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. பல்லக்கில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி கொண்டு வரப்பட்டு மகாதானபுரத்தில் பாணாசுரனை வேட்டையாடி வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.