திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் நெய்குளத்தில் தோன்றிய அம்மன் திருமுகம்
Oct 27 2020 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சீதளாதேவி மாரியம்மன் கோயிலில், அம்மன் திருமுகம் நெய்குளத்தில் தோன்றியதை அடுத்து திரளான பக்தர்கள் வழிபட்டனர். இவ்வாலயத்தில் நவராத்திரி விழாவின் நிறைவாக, மாரியம்மன் முன்பு 200 லிட்டருக்கு மேல் நெய்யினை குளம்போல் ஒரு அகண்ட தட்டு ஒன்றில் ஊற்றி வைக்கப்பட்டு, நெய்யில் அம்மன் திருமுகம் பிரதபலிக்கும். நெய்குளத்தில் பிரதிபலிக்கும் அம்மனின் திருமுகத்தை காணும்போது, நோய் நொடியிலிருந்து மீள்வதுடன், திருமணமாகாத கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.