பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 58ஆவது குருபூஜை விழா - சொந்த கிராமமான பசும்பொன்னில், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
Oct 28 2020 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 58ஆவது குருபூஜை விழா, அவரது சொந்த கிராமமான பசும்பொன்னில், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா, அவரது நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் கிராமத்தில், ஆண்டுதோறும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், அக்டோபர் 30ஆம் தேதி குருபூஜை விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, பசும்பொன்னில் முதல்நாள் நிகழ்ச்சி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் முன்னிலையில், வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, யாகசாலை பூஜையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. இதில், முத்துராமலிங்க தேவரின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.